ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் [1978] ஜெயகாந்தனின் காலத்தை வென்ற படைப்பு


இன்று ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் திரைப்படம் யூட்யூப் புண்ணியத்தில் பார்த்தேன்,நெடுநாளாக கிடைக்காமல் இருந்த படம்.எத்தனை அருமையான ஒரு படைப்பு!!!. இப்படம் இயக்கும் போதே பீம்சிங் மறைந்து விட்டதால், ஜெயகாந்தன் இரண்டாம் யூனிட் இயக்குனராக திருமலை மகாலிங்கம் என்பவரைக் கொண்டு படத்தை முடித்ததாக தன் பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார்.படத்தின் மிக அருமையான ஒளிப்பதிவு பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான பி.கண்ணன்.இந்தப் படம் 1978 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது, ஒரு நாவலை எத்தனை அழகாக அதன் வடிவம் மாறாமல் படமாக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இப்படத்தையும்,சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தையும் சொல்லலாம். ஜெயகாந்தனின் இந்த இரண்டு திரைப்படங்களுமே நூறு வருடங்கள் கடந்தாலும் தமிழ் சினிமாவில் நிச்சயம் பேசப்படபோகும் படைப்புகள்.

ஜெயகாந்தனின் ஆஸ்தான நடிகர்களில் முதன்மையானவர் பெண் சிவாஜி என்றழைக்கப்படும் லட்சுமி இதில் கல்யாணி என்னும் நாடக நடிகை வேடம் செய்திருந்தார், ஜெயகாந்தனையும் அவரின் மையக் தாபாத்திரமான சுயநலமி  கதா நாயகன் பிம்பத்தையும் மிகச் சரியாக பிரதிபலிக்கும் அண்டர்ரேட்டட் நடிகரான  ஸ்ரீகாந்த் இதில் நாடக விமர்சனங்கள் எழுதும் ரங்கசாமி என்னும் கதாபாத்திரம் செய்திருந்தார், ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தையான ஒய்.ஜி.பாரத்தசாரதி அண்ணாசாமி ஐயர் கதாபாத்திரம் செய்திருந்தார். ஒய்.ஜி மகேந்திரன் இதில் கல்யாணியில் குழுவில் தபலா கலைஞர் தாமுவாக வேடம் ஏற்றிருந்தார்,

தாய் தந்தையை சிறுவயதிலேயே இழந்த நாடக நடிகை கல்யாணி,அழகியல் உணர்ச்சி மிகவும் நிறைந்தவள், தன் வீடு முழுக்க பதியம் போட்டு ரோஜாச்செடிகள் வளர்க்கிறார், ஓய்வு வேளைகளில் புற்களை வெட்டி சீராக்குகிறாள் ,தன் மேடை நாடக சபாவை உயிருக்கு உயிராக நேசிப்பவள்,தன் தந்தையின் நண்பரான அண்ணாசாமியின் துணை கொண்டு பிரபல நாடக குழு தலைவியாக வளர்ந்து நிற்பவள். 32 வயதாகியும் மணமாகாதவள், நல்ல துணைக்காக ஏங்குபவள். அப்படி அவளின் நாடகத்துக்கு வந்த கறாரான நாடக விமர்சகரான எழுத்தாளர் ரங்காவை  விரும்புகிறாள், ரங்கா கதைகள் எழுதுவதை விட்டுவிட்டு விமர்சகர் ஆகிவிட்டாலும்,இவள் அவற்றை இன்னமும் நினைவில் வைத்திருப்பவள்.

அவருக்கு ஒரு கடிதம் எழுதி முடிந்தால் எழுதியது யார் ? என்பதை முடிந்தால் கண்டுபிடித்து தன்னை வந்து பார்க்குமாறு சவால் விடுகிறாள் கல்யாணி. ரங்கசாமி இவளாகத்தான் இருக்கும் என்று யூகித்தவர் அவளைச் சந்தித்து தன் வாரமலர் இதழுக்கு ஒரு பேட்டி தருமாறு கேட்க, அவள் அண்ணாசாமியையும் கூட வைத்துக்கொண்டு பேட்டி தருகிறாள். அப்போது அண்ணாசாமி ரங்காவிடம் பேச்சுக் கொடுத்து, ரங்கா மனைவியை இழந்தவர். 5 வயதுப் பெண்குழந்தையின் தந்தை, அக்குழந்தையை ஊரில் மாமனார் வளர்க்கின்றனர் போன்ற விபரங்களைக் கேட்டறிகின்றனர். 

ரங்காவின் மேதமை,பொதுவுடமை சித்தாந்தப் பேச்சு போன்றவற்றால் மயங்கியவள், மறுநாளே ரங்காவை விருந்துக்கு அழைத்தவள். ரங்காவுக்கு உணவும் பரிமாறி பின் தன்னையும் விருந்தாக பரிமாறுகிறாள்,தன் தாயார் பொட்டுக்கட்டி வாழ்ந்த தாசிக்குலம் என்பதால் தானும் ரங்காவுக்கு தாசியாக இருக்கவும் தயாராக இருக்கையில்,சில நாட்களே சேர்ந்து வாழாஅரம்பித்த நிலையில் அண்ணாசாமி ஐயரின் கண்டிப்பான அறிவுரையை ஏற்ற ரங்கா , கல்யாணியை எளிமையாக பதிவுத் திருமணமே செய்து கொள்கிறார். கல்யாணி அவரின் இந்த தயையை எதிர்பார்க்கவேயில்லை, ரங்காவை உச்சி மோர்ந்து கொண்டாடுகிறார்.

கல்யாணியில் சித்தி மகளான பார்வதி கல்யாணியின் வீட்டில் சமையல் வேலை செய்து ஒத்தாசையாக இருந்தவளை ஆசையைத் தூண்டிவிட்டுக் காதலிக்கிறார் தபேலாக் கலைஞர் தாமு.மிகுந்த யோசனைக்கு இடையில் கல்யாணி பாரு தாமுவின் திருமணத்தை  நடத்தி வைக்கிறாள்.
மகிழ்ச்சியான இல்லறத்தில் ரங்காவின் சுயநல,ஆணாதிக்க முகம் அவ்வப் பொழுது தலைகாட்டுகிறது,அப்பொதெல்லாம் இன்முகமாக விட்டுக் கொடுத்துப் போகிறார் கல்யாணி. ரங்கா நாயக்கர் சாதி,அவரின் சித்தப்பாவான சின்ன நயினா [தேங்காய் சீனிவாசன்] வீட்டில் குடியிருந்தவர், திருமணத்துக்குப் பின்னர் மிகுந்த சாதிப் பற்றுள்ள அவர்களின் வீட்டில் கல்யாணியை குடிவைக்க யோசிக்கிறார், கல்யாணியின் சொந்தமான பெரிய வீட்டிற்கும் தான் குடியேற அவரது ஆணாதிக்க மனோபாவம் முட்டுக்கட்டை போட, கல்யாணியிடம் சொல்லி அவ்வீட்டை வாடகைக்கு விட வைத்து, அவரும் கல்யாணியும் வேறு ஒரு வாடகை வீட்டிற்கு புதுக்குடித்தனம் செல்கின்றனர்.

ரங்காவின் கல்யாணியுடனான மறுமணம் சின்ன நயினாவுக்கும் அவர் மனைவி தொத்தாவுக்கும் [காந்திமதி] அவ்வளவாகப் பிடிப்பதில்லை.இதில் சின்ன நயினாவாக வந்த தேங்காய் சீனிவாசன் மிக அருமையாக அண்டர்ப்ளே செய்து நடித்த படம். இவரின் கதாபாத்திரம் எத்தனை வருடங்கள் ஆனாலும் மனதை விட்டு நீங்காது. ரங்காவின் மறுமணத்தை இவர்கள் எதிர்க்கவில்லை, கல்யாணி தங்கள் ஜாதியாக இல்லையே என்ற பிற்போக்குத்தனத்தில் அவர்கள் இத்திருமணத்தை ஆதரிக்கவில்லை என்பது தான் உண்மை.  ஊரிலிருக்கும் ரங்காவுடைய மாமனாருக்கும், ரங்காவின் மகளை வளர்த்து வரும் அவரின் கொழுந்தியாளுக்கும் கூட இந்த மறுமணம் பிடிப்பதில்லை, அவர்கள் அந்தப் பெண் குழந்தையையும் ரங்காவிடம் தர மறுத்துவிடுகின்றனர். சுயநலமியான ரங்காவுக்கு இதுவும் வசதியாகவே போய்விடுகிறது. கல்யாணியை அவ்வப்பொழுது வார்த்தைகளால் குத்திக் காயப்படுத்தினாலும் இவர் வேண்டும் பொழுது கட்டிலில் கல்யாணி போட்டது போட்டபடி வந்து விட வேண்டியிருக்கிறது. 


ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது தான் யதார்த்த நிஜம் என ரங்கா நினைக்கிறார்,அவர் மனதில் தாழ்வுமனப்பான்மை தலைதூக்குகிறது. தனக்கு நிகரான அறிவுடன் தன் மனைவி இருப்பதை ஆணாதிக்க மனோபாவம் கொண்ட ரங்கா ஏற்க மறுக்கிறார். தன் சின்ன நைனாவைச் சென்று பார்த்தவர், அவர் இவரிடம் தன் சாதிப் பெண்ணான இவரின் கொழுந்தியாளையே திருமணம் செய்து கொண்டு,அந்த நாடக நடிகையை ஆசைநாயகியாக வைத்துக்கொள் , அது ஒன்றும் நமது சாதிக்கு புதியதல்ல என்று கொம்பு சீவி விடுகிறார், மனைவி தமக்கு சரி நிகர் சமானமாக தேர்ந்தெடுத்துக் கொண்டால் வாழக்கை சுவையாக இருக்காது என்றவர், கல்யாணியை விட்டு விலக நாடகத்துக்கு முழுக்கு போடுமாறு கேள்,அவள் விட முடியாது என்று நிச்சயம் சொல்லுவாள், அது தான் சாக்கென்று நீ இங்கே வந்து விடு,மெல்ல வேறு பெண்ணைப் பார்த்து முடித்து விடலாம் என்று யோசனை சொல்ல,விஷமாகிறார் ரங்கா.

இந்த வாடகை வீட்டிலும் பார்த்துப் பார்த்து பதியமிட்டு ரோஜாச்செடி வளர்க்கும் கல்யாணியுடன் தர்க்கம் செய்கிறார் ரங்கா,நாட்டில் பசி பட்டினி வேலையில்லா திண்டாட்டங்கள் நிறைந்த இக்காலத்தில் காய்கறியான கத்தரிக்காய் வளர்ப்பதே பலன் தரும், ரோஜாக்கள் வெறும் ஏஸ்தெடிக்ஸ், வீண் டம்பமான செயல் என்கிறார். அது முதல்   முனுக்கென்றால் தேள் போலக் கொட்டி கல்யாணியை புண்படுத்துகிறார் ரங்கா, கருத்து வேறுபாடுகள் வேரூன்றத் துவங்க, ரங்கா தன் பெட்டிப்படுக்கையோடு சின்ன நைனாவின் பாரம்பரிய ஓட்டு வீடு இருக்கும் சூளைக்கே சென்று விடுகிறார். கல்யாணியோடு சண்டையும் இல்லை சமாதானமும் இல்லை. இவர்களிருவருக்குள்ளும் இன்னமும் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு இருக்கிறது. ரங்கா படுக்கை சுகம் தேவைப் படுகையில் கல்யாணியைத் காண வருவார், கல்யாணியும் தேவையறிந்து நிறைவேற்றுவாள்.

இப்படி கல்யாணி,எதற்கும் எதிர்க்காமல் பசுவைப் போல நடந்து கொள்வதும் ரங்காவுக்கு மிகுந்த தாழ்வு மனப்பான்மையை அதிகமாக்குகிறது. கல்யாணியிடம் இனி நாம் தம்பதிகள் என்ற பந்தத்திலிருந்து விலகி நண்பர்கள் என்ற வட்டத்திலேயே வாழ்வோமே என யோசனை சொல்கிறார் ரங்கா. அதற்கும் சரி என்று சிரித்துக்கொண்டே உட்படுகிறார் கல்யாணி. ரங்கா தன் வழக்கறிஞர் நண்பன் ராகவனிடம் [நாகேஷ்] கல்யாணியை அழைத்துக் கொண்டு போகிறார். அங்கே காரல் மார்க்ஸின் பெரிய படம் மாட்டப்பட்டிருக்கிறது, அதைப் பார்க்கும் கல்யாணியிடம் அது ராகவனின் தந்தை கிடையாது என்று கிண்டலாகச் சொல்ல, கல்யாணி,எனக்கும் தெரியும் அது காரல்மார்க்ஸ் என்று என்கிறார்,அது ரங்காவுக்கு எரிச்சல் ஏற்படுத்துகிறது, தன் பத்தாம்பசலியான முன்னாள் மனைவி ஒரு நாள் கத்தரிக்காய் குழம்பு வைத்து இவருக்குப் பரிமாற, அவளை திட்டி அடக்கியதை நினைவுகூருகிறார். புத்திசாலி மனைவியை தேர்வு செய்ததை எண்ணி அங்கே புழுங்குகிறார்.
வக்கில் நண்பர் ராகவன் [நாகேஷ்]  இருவரையும் வாதங்களால் துளைத்தெடுக்கிறார். நாகேஷ் மிக அருமையாக அண்டர் ப்ளே செய்து நடித்த படங்களில் இது முதன்மையான படம், சில நேரங்களில் சில மனிதர்கள்  படத்திலும் அவரின் நடிப்பு மிகவும் பேசப்பட்டிருக்கும். இப்படம் பார்த்தவர்கள் நிச்சயம் நாகேஷின் வக்கில் கதாபாத்திரத்தை மறந்திருக்க மாட்டார்கள். ராகவனின்  நியாயமான சட்டத்தின் பார்வையில் ஏன் விவாக ரத்து? என்று கிடுக்கிப்பிடி போடும் கேள்விகளுக்கு அங்கே இருவராலும் பதில் சொல்ல முடியவில்லை.
 திருமணத்துக்கு பின்னர் எங்களால் ஒருவரை ஒருவர் விரும்ப முடியவில்லை என்று அவர்கள் கூறும் சப்பைக் காரணங்களெல்லாம் சட்டத்த்தால் விவாகரத்து அளிக்க முடியாது, இருவரில் ஒருவருக்கு ஏதேனும் உடற்குறையிருந்தால் வேண்டுமென்றால்  விவாகரத்து கிடைக்கும் என்றவர்,   அன்று பேசியதில் தான் உணர்ந்த வரையில் இவர்கள் என்றைக்குமே பிரியமாட்டார்கள் என்கிறார், 

இருவரும் சேர்ந்து வாழ வேண்டுமென்பதே தன் விருப்பம்  அவர்கள் ஆழ் மனதிலும் அதுதான் உள்ளது என்றும் சொன்னவர்,திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில் தான் தம்பதிகள் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க முடியும், மேலும் அவர்கள் எக்காரணம் கொண்டும் ஒரு வருடத்துக்கு சந்திக்கவே கூடாது, தொலைபேசியிலும் பேசிக்கொள்ளுதல் கூடாது என்பதும் முக்கிய நிபந்தனைகள் என்று அறிவுருத்தி அனுப்புகிறார்.

கல்யாணிக்கு இந்த மணஉறவிலிருந்து விடுபட விருப்பமில்லை, ரங்காவின் முடிவை எதிர்த்து அவரை நிர்ப்பந்தப்படுத்தவும் விரும்பவில்லை. ரங்கா அன்று போனவர் மூன்று மாதங்களாக அவள் வீட்டுக்கே வரவில்லை. அண்ணாசாமியும், பட்டுவும் மட்டுமே அவளுக்கு ஆறுதலாக உள்ளனர். பட்டுவுகும் தாமுவுக்கும் அடிக்கடி சண்டை வருவதால் கர்ப்பிணியான பட்டு கல்யாணியுடனே ஒத்தாசைக்கு வந்து விடுகிறாள்.

 மனச்சோர்வு கொண்ட கல்யாணி உடல் நாளுக்கு நாள்  நலிவுற. ஒரு நாள் படுக்கையில் இருந்து எழும் அவளுக்கு இரண்டு கால்களையும் அசைக்க முடியவில்லை. அவளுக்கு தண்டு வடத்தில் ஏற்படும் பிரச்சனையால் கால்களில் முடக்கு வாதம் வந்துவிடுகிறது, முடங்கிப் போகிறாள் கல்யாணி. அண்ணாசாமி கல்யாணியை மருத்துவமனையில் சேர்க்கிறார்.கல்யாணியின் கால்கள் குணமடைய வாய்ப்புள்ளது, ஆனால்சிறிது காலங்கள் செல்ல வேண்டும் என்று டாக்டர் அறிவுருத்துகிறார்.

இரண்டு மாதங்களாக சக்கர நாற்காலியில் முடங்கிப் போன கல்யாணியை காண்கையில் மனம் குமுறும் அண்ணாசாமி,ரங்காவின் சூளை வீட்டுக்குச் சென்று கல்யாணியைப் பற்றிச் சொல்ல, ரங்கா  உடனே மனைவியைக் காண வருகிறார். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்த பின்பும், சக்கர நாற்காலியே கதியாக இருக்கும் கல்யாணிக்கு ரங்கா மிகவும் ஒத்தாசையாக இருக்கிறார். கல்யாணியின் எல்லாத் தேவைகளையும் பார்த்துப் பார்த்து கைகளில்  சுமந்து சென்று செய்கிறார். அன்று இவர்களைக் காண வரும் வக்கீல் ராகவன் இவர்கள் முன் வைத்து  ரங்காவின் காதைக் கடிக்கிறார், கல்யாணிக்கு  இப்போது இருக்கும்  உடல் குறைபாட்டைக்  காட்டி உடனடியாக விவாகரத்து வாங்கிவிடலாம், சட்டம் இதற்கு துணைநிற்கும்  என்று சொல்ல,திடீர் மனிதாபிமானியாக மாறிவிட்ட ரங்கா அருவருப்படைகிறார்.

 என்ன பைத்தியக்காரத்தனமான  சட்டம்?. தம்பதிகள் திடமாக ஒருவர் துணையின்றி ஒருவர் வாழலாம் என்கிற நிலையில் விவாகரத்து அளிக்க முன்வரா சட்டம்,  ஒருவரில்லாமல் ஒருவர் வாழ முடியாது என்ற அளவுக்கு நோயுற்றிருக்கும் போது அக்குறையையே காரணமாக வைத்து விவாகரத்து அளிக்க முடியும் என்றால் அச்சட்டம் தேவையே இல்லை  என்று கோபமாகக் கூறுகிறார்.

வக்கீல் ராகவன் ரங்காவின் இந்த நிஜமான மனமாற்றத்தால்  மகிழ்ச்சியடந்தாலும் வெளிக்காட்டிக்கொள்வதில்லை.  அண்ணாசாமியையும் அங்கே கண்ணைக் காட்டி வெளியில் அழைத்துக்கொண்டு போகிறார். கல்யாணியும் ரங்காவும் அங்கே ஆரத்தழுவிக்கொள்கின்றனர். இப்போது நடக்க முடியாத தன் மனைவிக்கு கால்களாக தான் இருப்பதே ரங்காவுக்கு மன நிறைவைத் தருகிறது.இப்போது அவருக்கு தாழ்வு மனப்பான்மையே எழுவதில்லை,அவளை சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டே அண்ணாசாமி தலைமை ஏற்று நடத்தும் நாடகம் பார்க்க அழைத்துச் செல்கிறார் . தன்  நாடகக்குழு நடத்தும் நாடகத்தைப் பார்த்ததும், தனக்கு கால்கள் மீண்டும் வந்துவிட்டது போல மனதால் கல்யாணியும் அங்கே மேடையேறுகிறாள். ஆனால் அவள் ரங்காவின் அருகில் தான் அமர்ந்து நாடகத்தை அமைதியாகப் பார்க்கிறாள்.
    
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் எத்தனை மலர்கள்? எத்தனை நிறங்கள்? எத்தனை மனங்கள் திருமணங்கள்   என்னும் டி.எம்.எஸ்., வாணி ஜெயராம் பாடிய பாடலை இங்கே பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=yJSytDOxrUY


படத்தின் கடைசிக் காட்சியில் வரும்  நடிகை பார்க்கும் நாடகம் அதில் மனிதர் எல்லாம் பாத்திரம்  என்னும் மிக அருமையான பாடலும் ரேர் ஜெம்கள் ஆகும். இப்பாடலை ஜெயச்சந்திரன்,சசிரேகா பாடியிருப்பார்கள்.இப்பாடலை இங்கே பாருங்கள்.
 http://www.youtube.com/watch?v=BQgmCq7Czyw

 இப்படத்தின் கதை வசனம்  பாடல்களையும் ஜெயகாந்தனே எழுதினார்.இந்தக் கதை உருவாக காரணிகளாக ஜெயகாந்தன் தன் திண்ணை பத்திரிக்கைப் பேட்டியில் இப்படிச் சொல்லியிருந்தார்.

இண்டெலெக்சுவல் என்பது படித்தவர்கள் இல்லை. சிந்திக்கிறவர்கள். ஒரு பாத்திரம் சிந்திக்கிற பொழுது, தன் அறிவினால் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறவர்களாக மாறுகிறார்கள். அவள் ஓரளவிற்குப் படித்தவள். ஓரளவிற்குச் சிந்திக்கத் தெரிந்தவள். வாழ்க்கையில் ஆண் துணை வேண்டும் என்று சிந்தித்து செயல் படுகிறாள். அவர்(சாமி) முன்னாலே ப்ரொபோஸ் பண்ணியிருந்தால், அவருடன் கூட அவள் இருந்திருக்கக் கூடும். 
அவளுக்குப் பத்திரிகை நிருபராய் வரும் ரங்காவிடம் ஒரு ஈடுபாடு. அவள் தான் அவனுக்குக் கடிதம் எழுதி இந்தக் கடிதம் எங்கேயிருந்து வருகிறது என்று தெரிந்தால் வந்து சந்திக்கவும் என்று எழுதுகிறாள். ஆனால் ரங்கா , அவளை பேட்டி காண்பவனாக வருகிறான். போட்டோவிலே கையெழுத்துப் போடச் சொல்லிக் கேட்பான். போட்டோவிலேயாவது கையெழுத்துப் போடலாமில்லையா ? என்று கேட்பான்.
துர்கனேவ்-இன் ஒரு நாவலில் நாயகி இப்படித் தான் தனக்குப் பிரியமானவனுக்கு எழுதுகிறாள். அதைப் படித்ததன் விளைவு என்று பிறகு கண்டுபிடித்தேன். அவள் கால் விளங்காமலான பிறகு, மனிதாபிமானத்தோடு இணைகிறான். அதன் காரணமாக அவளை விவாக ரத்து செய்து விடலாம் என்று சட்டம் சொல்லும் பொழுது அது அவனுக்கு அநியாயமாகத் தோன்றுகிறது. மனிதாபிமானத்திற்கு விரோதமென அவனுக்குத் தோன்றுகிறது. காதலுக்கு அடிப்படை மனிதாபிமானம் தான் . அது தான் இந்த நாவலில் வலியுறுத்தப்படுகிறது.
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் முழுப்படமும் யூட்யூபில் கிடைக்கிறது.யாரும் தவற விடக்கூடாத ஒரு க்ளாஸிக் இப்படம் இது.
http://www.youtube.com/watch?v=nbLGAYOE33Q 

ஜெயகாந்தனின் இன்ன பிற உன்னதமான திரைப்படைப்புகள் 
  1. உன்னைப்போல் ஒருவன், கமல்ஹாசன் புண்ணியத்தில் 1965 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தைப் பற்றி தேடினால் அவரின் உபோ ஒ தான் கழிவுப்பெருக்காக வருகிறது.
  2.  யாருக்காக அழுதான்  திரைப்படத்தின்  டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.
  3. சில நேரங்களில் சில மனிதர்கள்  யூட்யூபில் பார்க்கக் கிடைக்கின்றது டிவிடி பிரதியும் கிடைக்கின்றது 
  4. எத்தனை கோணம் எத்தனை பார்வை  திரைப்படத்தின்  டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.
  5. புதுசெருப்பு கடிக்கும்  திரைப்படத்தின்  டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.
  6. ஊருக்கு நூறு பேர் கதையைஇயக்குனர் லெனின் படமாக்கி அது தேசிய திரைப்படவிழாவில் கலந்து கொண்டது அதன் டிவிடி பிரதி எங்குமே கிடைப்பதில்லை. 
  7. சினிமாவுக்கு போன சித்தாளு கௌதமன் இயக்கத்தில் வெளியானது,அதன் டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.
ஜெயகாந்தன் ஞானபீடம் பரிசு பெற்ற நாம் வாழும் காலத்தின் மாபெரும் படைப்பாளி.  பொதுவுடமை புரட்சி சிந்தனையாளர். இலக்கியம் மற்றும் சினிமாவில் தன் முத்திரையைப் பதித்தவர்.  இப்படி பலச் சிறப்புகள் இருந்தும் அவர் இயக்கிய திரைப்படங்களை நாம் தேடிப்பார்க்க வழியின்றி இருப்பது எத்தனை அவமானம் பாருங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)